புணர்ப்ப தொக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் புணர்ப்ப தன்றி தென்ற போது நின்னொ டென்னொ டென்னிதாம் புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நின் கழல் கணே புணர்ப்ப தாக அம் கணாள புங்கம் ஆன போகமே |
71
|
போகம் வேண்டி வேண்டி லேன் புரந்த ராதி இன்பமும் ஏக நின் கழல் இணை யலா திலேன் என் எம்பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே ஆக என் கை கண்கள் தாரை ஆற தாக ஐயனே
|
72
|
ஐய நின்ன தல்ல தில்லை மற்றோர் பற்று வஞ்சனேன் பொய் கலந்த தல்ல தில்லை பொய்மை யேன்என் எம்பிரான் மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே மெய் கலந்த அன்பர் அன்பெ னக்கும் ஆக வேண்டுமே
|
73
|
வேண்டும் நின்கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும்என்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே
|
74
|
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலமிட்டு உணங்கும் நின்னை எய்த லுற்று மற்றோர் உண்மை இன்மையின் வணங்கி யாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு இணங்கு கொங்கை மங்கை பங்க என்கொலோ நினைப்பதே
|
75
|
| |
நினைப்ப தாக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால் தினைத்தனையும் ஆவ தில்லை சொல்லல் ஆவ கேட்பவே அனைத் துலகும் ஆய நின்னை ஐம் புலன்கள் காண்கிலா எனைத்எனைத்த தெப் புறத்த தெந்தை பாதம் எய்தவே?
|
76
|
எய்தல் ஆவ தென்று நின்னை எம்பிரான் இவ் வஞ்சனேற்கு உய்தல் ஆவது உன்கண் அன்றி மற்றோர் உண்மை இன்மையின் பைதல் ஆவ தென்று பாது காத் திரங்கு பாவியேற்கு இஃது அலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே
|
77
|
ஈசனே நீ அல்ல தில்லை இங்கும் அங்கும் என்பதும் பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என்எம்பிரான் நீசனேனை ஆண்டு கொண்ட நின் மலா ஒர் நின்அலால் தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே.
|
78
|
சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீரில் ஐம் புலன்களால் முந்தை ஆன காலம் நின்னை எய்தி டாத மூர்க்கனேன் வெந்தையா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற் றிருப்பனே.
|
79
|
இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்ன தாள் கருப்பு மட்டு வாய் மடுத் தெனைக் கலந்து போகவும் நெருப்பும் உண்டு யானும் உண்டி ருந்த துண்ட தாயினும் விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்ப தென்ன விச்சையே
|
80 |
No Comments Yet...